அடடே நம்ம தேர்தல் அதிகாரிகளின் கடமையை பாருங்களேன்! தேர்தல் தேதி அறிவித்த பின், பழக்க தோஷத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை மறைத்த அதிகாரிகள் மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டியதில்லை என தேர்தல் கமிஷன் சொன்னதால் திரையை விலக்கினர். ஆனாலும் அவர்கள் கையில் அரசியல் உள்ளது எனக் கூறி அதில் கிளவுஸ் போன்ற துணியால் மறைத்து கடமையாற்றி உள்ளனர். இடம்: கே.கே.நகர், மதுரை.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.