நயன்தாரா குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்த மம்முட்டி
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் இரட்டையர் மகன்கள் உலக், உயிர். இவர்கள் இருவரும் மலையாள நடிகர் மம்முட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அதில் எந்த ஒரு தகவலும் பதிவிடாமல் ஒரே ஒரு படத்தை மட்டும் அவர் பதிவிட்டிருந்தார்.
ஆனால், மம்முட்டியின் கம்பெனி நிறுவன எக்ஸ் தளத்தில் வேறு சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “சிறு சிறு சிரிப்பொலிகள், அகன்ற புன்னகைகள், மற்றும் அளவற்ற மகிழ்ச்சி'' எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு சோபாவில் அருகருகே உலக், உயிர் ஆகியோரும், மம்முட்டியும் அமர்ந்திருக்க குழந்தைகள் பேசியதற்கு மம்முட்டி சிரித்தாரா, மம்முட்டி பேசியதற்கு குழந்தைகள் சிரித்தார்களா என புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
மம்முட்டி, நயன்தாரா இருவரும் சில மலையாளப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.