உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரவுத்திரன்' ஆக மாறும் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ்!

'ரவுத்திரன்' ஆக மாறும் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ராஜேஷ்!


தயாரிப்பாளர் கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் சமீபத்தில் திரைக்கு வந்த 'அங்கீகாரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் ராஜேஷிற்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்த ஊக்கத்துடன் தற்போது அடுத்த படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் ராஜேஷ். ராஜேஷின் புதிய படத்தை பிரசாந்த் பாண்டியராஜனின் உதவி இயக்குநர் ரீகன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ரவுத்திரன்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் 25 வயது காலகட்டம், 30 வயதுக்கும் மேல் காலகட்டம் மற்றும் 50 வயது காலகட்டம் என மூன்று பருவத்திலும் ராஜேஷ் தனது உடலை மெருகேற்றி, இழைத்து நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-07-13 20:26:20

உங்கள் தன்னம்பிக்கை உங்களை உயர்த்தும். உங்கள் கடின உழைப்பு உங்களை அடையாளம் காட்டும். உங்களுக்கு முதல் படத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருக்கு அதை ரவ்த்திரம் பழகி தக்க வைத்து கொள்ளுங்கள்..