பாடகி ஜானகி அஸ்தி காவிரியில் கரைப்பு
ADDED : 14 hours ago
இந்திய சினிமாவின் முன்னணி பாடகியான எஸ்.ஜானகி தனது 88வது வயதில் காலமானார். அவர் தனது கடைசி காலத்தில் மைசூரில் உள்ள தனது இல்லத்தில் வாழ்ந்து வந்தார், முதுமை தந்த உடல்நலக்குறைவால் கடந்த 11ம் தேதி இயற்கை எய்தினார்.
பிரதமர், ஜனாதிபதி, அரசியல் தலைவர்கள், முன்னணி நடிகர் நடிகைகள், இசையுலகை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்தனர். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, நேற்று முன்தினம் மாலை மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டை தாலுகாவை சேர்ந்த கனியனகுந்தி கிராமத்தின் அருகில் உள்ள அவரது தோட்டத்தில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று எஸ்.ஜானகியின் அஸ்தி மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள 'பச்சிமா வாகினி' என்ற இடத்திற்கு எடுத்துத் செல்லப்பட்டது. அங்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத காவிரியில் கரைக்கப்பட்டது.