இந்தியா உள்ளிட்ட 5 நாட்டு விமானப்படை விமானங்கள் பங்கேற்கும் தாரன் சக்தி 2024 பயிற்சி கோவை சூலூர் விமானபடை தளத்தில் நடந்தது, இதில் கவர்னர் ரவியுடன் (இடமிருந்து) ஸ்பெயின் விமானப்படை தலைமை தளபதி பிரான்சிஸ்கோ பிராகோ கார்போ, ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட், இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, பிரான்ஸ் விமானப்படை தலைமை தளபதி ஸ்டீபன் மில்லே.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் மூட்டைகள் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து, முளைத்து அழுகி வீணாகின்றன.
திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.
கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்