sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1053

தேர்தல் யுத்தம் ஆரம்பம் ! ஸ்டாலின் நியமித்த படைத்தளபதிகள் யார்? | Dinamalarsidelights | Pollachicase

வீடியோ: அரசியல்

13-May-2025

அசுவினி: நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்னை, பிள்ளைகளால் கவலை என்று ஏற்பட வாய்ப்பிருந்தாலும், லாப ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனியும், யோகக்காரகன் ராகுவும் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட தடை எல்லாம் விலக ஆரம்பிக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். மூடிக்கிடந்த தொழில்கள் மறுபடியும் இயங்க ஆரம்பிக்கும். வியபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணத்தினால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். குரு பகவானின் பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன் வரும். சொந்த வீடு வாங்குவதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகளில் முடிவு உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும். விவசாயிகளுக்கு முன்னேற்றமாக இருக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 8, 9.அதிர்ஷ்ட நாள்: மே. 16, 18, 25, 27. ஜூன். 7.பரிகாரம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.பரணிவாழ்வில் எப்போதும் முன்னேற்றத்தை நோக்கியே நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் உங்களிடம் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலக ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தொழிலை விரிவு செய்வதற்காக வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சேமிப்பு உயரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் குடும்ப சொத்துகளில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றாலும், அதைப் பேசித்தீர்ப்பீர்கள் குழந்தைகள் மீது அக்கறை எடுப்பீர்கள். அவர்கள் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். வீ்ண் பிரச்னைகளை சந்திப்பீர். லாப ராகுவால் வியாபாரத்தில் உங்கள் கவனம் அதிகரிக்கும். தனியாரில் பணியாற்றி வருபவர்கள் சிலர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி மேற்கொள்வீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். விவசாயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வு முடிவு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். தொண்டர்கள் பலம் கூடும்.சந்திராஷ்டமம்: ஜூன் 10, 11.அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன். 6, 9.பரிகாரம்: துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.கார்த்திகை 1 ம் பாதம்எடுத்த வேலையை முடிப்பதில் முதலிடத்தில் இருக்கும் உங்களுக்கு எப்போதும் யோகப் பலன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். பிறக்கும் வைகாசி மாதம் கடந்த மாதத்தை விட நன்மையான மாதம். குடும்ப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. வரவு செலவில் எச்சரிக்கை அவசியம். இக்காலத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது உங்களுக்கு நல்லது. இந்த நேரத்தில் ராசி நாதனின் சஞ்சாரம் 4 ம் இடமான சுக ஸ்தானத்தில் ஜூன் 8 வரை இருந்தாலும் அவர் நீச்சமாகி இருப்பதால் பெரிய அளவில் உங்களுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் போகும். உடல்நிலையில் தெளிவு இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அதன் பிறகு 5 ம் இடத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கேதுவுடன் இணைவதால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பிள்ளைகள் மேல் அக்கறை செலுத்த வேண்டிய அளவிற்கு அவர்களுடைய செயல்பாடு இருக்கும். பூர்வீக சொத்துகளில் பிரச்னை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள் ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள். தொழில், உத்யோகத்தில் இருந்த பிரச்னை விலகி முன்னேற்றமான நிலை உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க முடியும். மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நனவாகும். ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும். கலைஞர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: ஜூன் 11, மே.15.அதிர்ஷ்ட நாள்: மே. 18, 19, 27, 28. ஜூன். 1, 9, 10.பரிகாரம்: சூரிய வழிபாடு மேற்கொள்ள வளம் கூடும்.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எதிலும் தனித்து நின்று சாதனைப் படைத்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் லாபாதிபதி குரு பகவான் தன குடும்ப வாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை எல்லாம் வெற்றியாகும். தடைபட்டு இருந்த முயற்சி நடக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். பண வரவு அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். ஜென்ம ராசிக்குள் உங்கள் நட்சத்திரநாதன் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் வேகமாக செயல்படுவீர். நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற வேகம் உங்களுக்குள் இருக்கும். அதனால் உடல் நிலையிலும் சில பாதிப்பு ஏற்படும். உங்கள் வேலைகள் அனைத்தும் வெற்றியாகும். இந்த நேரத்தில் தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தாய்வழி உறவுகளால்  சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஜீவன ஸ்தானத்தில் ராகு சனி சஞ்சரிப்பதால் செய்துவரும் தொழில் மீது அதிக அக்கறை தேவை. உத்யோகத்தில் சிலருக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும், நியாயமாக செயல்படுவதும் உங்களுக்கு நல்லது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பின் மீதான அக்கறையில் மாற்றம் உண்டாகும். நண்பர்களால் முன்னேற்றத்தில் தடை ஏற்படும் என்பதால் படிப்பில் கவனமாக இருப்பது இக்காலத்தில் அவசியம். செவ்வாய் பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சரித்தாலும் நீச்சமாகி இருப்பதால் முன்னேற்றமான பலன்களை அவரால் வழங்க முடியாமல் போகும். ஜூன் 8  முதல் 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன்  செவ்வாய் இணைவதால் உடல்நிலையில் சங்கடங்களை அதிகரிப்பார். உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் பேச்சுகளால் சிலருக்கு சங்கடம் உண்டாகலாம். நெருக்கடி ஏற்படலாம். சிலருக்கு பதவியும் பறிபோகலாம். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.சந்திராஷ்டமம்: மே 15, 16. ஜூன் 11, 12.அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28. ஜூன் 1, 6, 10.பரிகாரம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட வளம் உண்டாகும்.ரோகிணி தெளிவான சிந்தனையுடன் திட்டமிட்டு செயல்பட்டு முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு, வைகாசி மாதம் மிக யோகமான மாதம். இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். உத்யோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களின் செயல்பாடுகளை முறியடிப்பீர். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்து வந்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். பத்தாம் இட சனி பகவானுக்கும் ராகு பகவானுக்கும் குருவின் பார்வைக் கிடைப்பதால் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி இல்லாமல் போகும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வீண் சிந்தனைகளும், தவறான பழக்க வழக்கங்களும் இந்த நேரத்தில் உங்களை முன்னேற்றப் பாதையில் இருந்து மாற்றம் செய்யும். ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை வேகமாக செயல்பட வைப்பார். அதனால், உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு உண்டாகும்.சந்திராஷ்டமம்: மே 16, 17. ஜூன் 12, 13.அதிர்ஷ்ட நாள்: மே 15, 20, 24, 29. ஜூன். 2, 6, 11.பரிகாரம் மகாலட்சுமியை வழிபட நன்மை உண்டாகும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்தைரியமாகவும் திட்டமிட்டும் செயல்பட்டு முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு வைகாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் ஜூன் 8 வரை சஞ்சரித்தாலும், அவர் நீச்சம் அடைந்திருப்பதால் முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும். அதன் பிறகு சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் இணைவதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்பு தோன்றும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களைப் பாதுகாப்பார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். குடும்பத்தில் நிம்மதியான நிலையை ஏற்படுத்துவார். நிதி நிலையை உயர்த்துவார். உங்கள் செல்வாக்கை அதிகரிப்பார். எதிர்ப்பு, வழக்கு என்றிருந்த நிலைகளை மாற்றுவார். இத்தனை நாட்களும் எதையோ பறிகொடுத்ததுபோல் இருந்த உங்களுக்கு இனி முன்னேற்றமான நிலை ஏற்படும். உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்களும் நண்பர்களும் உங்கள் வளர்ச்சியைக் கண்டு ஆச்சரியப்படுவர். எடுக்கும் முயற்சி எல்லாம் வெற்றியாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு இக்காலம் யோகமாக இருக்கும். தொழிலை விரிவு செய்வீர். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிந்தனை தெளிவுபடும். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். வேளாண்மையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த நெருக்கடி விலகும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: மே 17. ஜூன் 13, 14.அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன். 6, 9.பரிகாரம்: வைத்தீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.

மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்சாமர்த்தியமாக சாதனைகள் புரிந்துவரும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக்காரகன் கேது உங்கள் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். இதுவரை உடல்நிலையில் இருந்த சங்கடம், உத்யோகத்தில் தோன்றிய பிரச்னை, குடும்பத்தில் இருந்த நெருக்கடி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். ஜூன் 8 முதல் உங்கள் லாபாதிபதி செவ்வாயும் மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்துசேரும். நினைத்த வேலைகள் நடக்கும். ஜூன் 2 முதல் புதன் ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் ஒரு சிலருக்கு திடீர் செலவு ஏற்படும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன்களை, வரிகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்ற நெருக்கடி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கும் எதிர்பாராத சங்கடம் தோன்றும். ஆசிரியர்களின் அறிவுரையால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மே 17, 18. ஜூன் 14.அதிர்ஷ்ட நாள்: மே 23, 27. ஜூன் 5, 9.பரிகாரம்: வைகுண்ட பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.திருவாதிரைநினைத்ததை சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுடன் இணைந்துள்ள ராகு உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சனி பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதுடன், அவருடைய பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய சொத்து சேரும். நேற்று தடைபட்டு வந்த வேலை நடக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். வம்பு வழக்குகளால் அவதிப்பட்டு வந்த நிலைமாறும். உங்களை எதிர்த்தவர்களே உங்களிடம் வந்து சரண் அடைவார்கள். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். தாய்வழி உறவுகள் மீண்டும் உங்களைத் தேடி வந்து சொந்தம் கொண்டாடுவர். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். புதிய வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மூன்றாமிடம் பலமடைவதால் அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்கள் பலம் கூடும். வெளிநாட்டு தொடர்பு சாதகமாகும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேர்வார்கள்.சந்திராஷ்டமம்: மே 18.அதிர்ஷ்ட நாள்: மே 22, 23, 31. ஜூன் 4, 5, 13, 14.பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட சங்கடம் நீங்கும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்புத்தி சாதுரியத்துடன் அறிவாற்றலும் கொண்டு செயல்படும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும், வேலையின் காரணமாகவோ, தொழிலின் காரணமாகவோ குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை சிலருக்கு உருவாகும். இக்காலத்தில்தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த ஒவ்வொன்றும் நடக்கும். அதற்கு காரணம் குருபகவானின் பார்வை தான். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். சொத்துப் பிரச்னையில் சுமூகமான நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உயர்கல்வி கனவு நனவாகும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலர் புதிய வீட்டில் குடியேறக்கூடிய நிலையும் உண்டாகும். பொருளாதாரவசதி அதிகரிக்கும். பெரிய மனிதருடைய ஆதரவு கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்து உயரும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் உங்கள் நிலையை மேலும் உயர்த்துவர். குடும்பத்திலும் தொழிலிலும் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இதுவரை இருந்த பிரச்னை நீங்கும். கணவருடன் இணக்கமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். குழந்தை பாக்யத்தில் ஏற்பட்ட தடை விலகும்.சந்திராஷ்டமம்: மே 19.அதிர்ஷ்ட நாள்: மே 21, 23, 30. ஜூன் 3, 5, 12, 14.பரிகாரம்: பிரம்மபுரீஸ்வரரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் 4 ம் பாதம்தெளிந்த ஞானமும்,  செல்வாக்கும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். குரு பகவான் விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வையால் உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட தடை, உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலக ஆரம்பிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும். ஆரோக்யமாக செயல்படத் தொடங்குவீர். ஜூன் 2 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் பாதிப்பு ஏற்படும் என பயப்பட வேண்டாம். குரு பகவானின் பார்வையால் தலைக்கு வருவதெல்லாம் தலைப்பாகையோடு போய்விடும். பெரிய அளவில் நீங்கள் பயந்திருந்த விஷயம் காணாமல் போகும். எந்த விதமான நெருக்கடியும் உங்களுக்கு ஏற்படாமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மே 20.அதிர்ஷட நாள்: மே 21, 29, 30. ஜூன் 2, 3, 11, 12.பரிகாரம்: சுந்தர மகாலிங்கத்தை வழிபட சுபிட்சம் உண்டாகும்.பூசம்எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவானும், ராகுவும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் ஒருவித பயம் இருக்கும். அஷ்டம சனி என்ற பயமும், ராகு என்ன செய்வாரோ என்ற பயமும் உண்டாகி இருக்கும். அஷ்டம சனியையும் ராகுவையும் குரு பகவான் பார்ப்பதால் இக்காலத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் போகும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். பட்ட அவமானம் நீங்கும். தடைபட்ட வேலைகள் நடைபெற ஆரம்பிக்கும். உடலிலும் மனதிலும் இருந்த பாதிப்பு பயம் நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். செல்வாக்கு வெளிப்படும். உங்களுக்கு நெருக்கடி கொடுத்தவர்கள் பலவீனம் அடைவர். வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய வாகனம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற முயற்சி வெற்றியாகும். கடன் அடைபடும். அதற்கேற்ற வகையில் வருமானமும் இருக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குள் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உங்கள் வார்த்தைகளால் தேவையற்ற பிரச்னை ஏற்படும். பண விவகாரத்தில் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி இருவருவரும் இக்காலத்தில் முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும்.சந்திராஷ்டமம்: மே 20, 21.அதிர்ஷ்ட நாள்: மே 17, 26, 29. ஜூன் 2, 8, 11.பரிகாரம்: சங்கர ராமேஸ்வரரை வழிபட சங்கடம் போகும்.ஆயில்யம் புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். உங்கள் தன, குடும்ப, வாக்காதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சப்பதால் வரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களிலும் இப்போது லாபத்தை எதிர்பார்க்க முடியும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். அரசு வழி முயற்சிகளில் லாபம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். மே 31 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வீடு வாங்குவீர். ஜூன் 2 வரை புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால், புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்துக் கொள்வீர். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களின் நீண்டநாள் கனவு நனவாகும். பழைய கடன்கள் அடைபடுவதுடன் சேமிப்பு உயரும்.சந்திராஷ்டமம்: மே 21, 22.அதிர்ஷ்ட நாள்: மே 20, 23, 29. ஜூன் 2, 5, 11, 14.பரிகாரம்: கண்ணுடைய நாயகியை வழிபட்டுவர நினைப்பது நடக்கும்.

மகம்மனதில் நினைத்ததை நடத்தி முடித்திட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். ராசிக்குள் ஞானமோட்சக் காரகன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி இல்லாத நிலை ஏற்படும். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் இந்த மாதத்தில் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். ராசிநாதன் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் கேந்திர பலத்துடன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை எல்லாம் வெற்றியாகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு உண்டாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு வேலை நியமன உத்தரவு கிடைக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஜூன் 8 வரை செவ்வாய் 12 ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அங்கு அவர் நீச்சம் அடைந்திருப்பதால் விரயச்செலவுகளும், வீண் அலைச்சலும் கட்டுப்படும்.சந்திராஷ்டமம்: மே 22.அதிர்ஷ்ட நாள்: மே 16, 19, 25, 28. ஜூன் 1, 7, 10.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.பூரம்எதிலும் முதல் இடத்தை நோக்கி நடை போட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் ராசிநாதன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதுடன் நட்சத்திரநாதன் சுக்கிரனின் சஞ்சாரமும் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் இந்த மாதத்தை உங்களுக்கு மிக யோகமான மாதம். குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் இந்த நேரத்தில் உங்களை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும். வருமானத்தை தடையில்லாமல் வழங்கும். செல்வாக்கை உயர்த்தும். தடைபட்ட வேலை ஒவ்வொன்றாக நடைபெற ஆரம்பிக்கும். வியாபாரம் தொழிலில் லாபம் கூடும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு காதல் கைகூடி திருமணம் வரையிலும் செல்லும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அதற்காக எதிர்பார்த்த அனுமதியும் கிடைக்கும். புத பகவானின் சஞ்சாரம் மே 16 முதல் சாதகமாக இருப்பதால் உங்கள் கனவு நனவாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கலைஞர்கள் நிலை முன்னேற்றம் அடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலுடன் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடித்து சாதனை புரிவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். உழைப்பாளர்கள் நிலை உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஏழாமிட சனி, ராகுவால் உங்களுக்கு உண்டாகும் பாதகப் பலன் குருப்பார்வையால் விலகும்.சந்திராஷ்டமம்: மே 23.அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28. ஜூன் 1, 6, 10.பரிகாரம்: திருவல்லீசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.உத்திரம் 1 ம் பாதம்:வாழ்வில் முதன்மையான இடத்தில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரித்தாலும், ராசிநாதன் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் வேலைகள் எல்லாம் நினைத்தபடி நடக்கும். இதுவரையில் இருந்த தடை ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி, சலுகை கிடைக்கும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். தொண்டர்கள் பலம் கூடும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் பணப்புழக்கத்தை அதிகரிப்பார். வியாபாரத்திலும் தொழிலிலும் லாபத்தை உண்டாக்குவார். நெருக்கடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். அவருடைய பார்வைகளாலும் உங்கள் வாழ்வை வளமாக்குவார். குரு பார்க்கும் இடமெல்லாம் சுபத்துவம் அடையும் என்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் முடிவிற்கு வந்து ஒற்றுமையான நிலை உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கூட்டுத்தொழிலில் லாபம் கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இருவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர். ஏழாம் இடத்தில் சஞ்சரித்து சங்கடங்களை வழங்கி வரும் சனி, ராகுவையும் குரு பகவான் பார்ப்பதால் அவர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். நீங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம், சந்தோஷம் என உங்கள் வாழ்க்கை வளமாகும். புத பகவானும் மே மாதம் 16 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம், வாகனம் என்ற கனவுகள் நனவாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். பெரியவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில சுப காரியம் நடக்கும். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு மிக அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: மே 24.அதிர்ஷ்ட நாள்: மே 19, 28. ஜூன் 1, 10.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: முன்னேற்றப்பாதையில் நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். கடந்த மாதம் இருந்த நெருக்கடி இந்த மாதம் இல்லாமல் போகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். அந்நியரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். அரசு வழியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். மனதிற்குள் ஒருவித அச்சமும், பயமும் இருந்து கொண்டே இருக்கும். இந்த நேரத்தில் மே 31 முதல் சுக்கிரன் மேஷத்தில் சஞ்சரிப்பதால் நன்மை அதிகரிக்கும். எதிர்பாலினரால் ஏற்பட்ட தொல்லை விலகும். புத பகவானின் சஞ்சாரம் ஜூன் 2 வரை சாதகமாக இல்லை என்பதால் ஷேர் மார்க்கெட், அதிர்ஷ்ட வாய்ப்பு போன்ற விவகாரம் இழுபறியாகும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரித்தாலும் அவரால் லாபத்தை வழங்க முடியாமல் போகும். இருந்தாலும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் தன் பார்வையால் நன்மையைச் செய்வார். சந்தோஷத்தை ஏற்படுத்துவார். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லையில் இருந்து விடுவிப்பார். வம்பு வழக்கு இல்லாமல் நடமாடக்கூடிய நிலை உண்டாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். முதியோர்களுக்கு ஏற்பட்ட ஆரோக்ய குறைபாடு சீராகும். மாதத்தின் பிற்பகுதியில் பொன் பொருள் சேரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.சந்திராஷ்டமம்: மே 24, 25.அதிர்ஷ்ட நாள்: மே 19, 23, 28. ஜூன் 1, 5, 10, 14.பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட நன்மை உண்டாகும்.அஸ்தம் திடமான சிந்தனையும், பணிவான செயல்பாடுகளும் கொண்டு வாழ்வில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் உங்கள் ஆற்றலை அதிகரிப்பர். நினைத்த வேலைகளை நடத்தி வைப்பர். வியாபாரம் தொழிலில் இருந்த தடைகளை இல்லாமல் செய்வர். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான நிலையை உண்டாக்குவர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை  விலகும். பத்தாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் வேலைகளில் நெருக்கடி உண்டாகும்.  அவருடைய பார்வைகள் 2, 4, 6 ம் உண்டாவதால் குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். பண வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தாய் வழி உறவுகளால் லாபம் உண்டாகும்.  நேற்று நிறைவேறாமல் இருந்த விருப்பம் நிறைவேறும். எல்லாவற்றிலும் வெற்றி என்ற நிலையை அடைவீர். புத பகவானின் சஞ்சாரம் ஜூன் 2 முதல் சாதகமாக இருப்பதால் புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட்டில் ஏற்பட்ட இழப்புகளை சரி கட்டுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும். பொருளாதார நெருக்கடி நீங்கும். விரயாதிபதி சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவு கட்டுப்படும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகள் வேளாண்மையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் இனி இல்லாமல் போகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் நிலையை நினைத்து வாழத் தொடங்குவீர்கள். ஒரு சிலர் புதிய வியாபாரம் தொடங்கி லாபம் காண்பீர். சிறு வியாபாரிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட நோய் விலகும். ஆரோக்கியம் சீராகும்.சந்திராஷ்டமம்: மே 25, 26.அதிர்ஷ்ட நாள்: மே 20, 23, 29. ஜூன் 2, 5, 11, 14.பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட நன்மை உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்அறிவாற்றலுடன் துணிச்சலாக செயல்பட்டு முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, இந்த மாதம் முன்னேற்றமான மாதமாகும். செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவர் நீச்சம் அடைந்திருப்பதால் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அதே நேரத்தில் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் போட்டி போட்டுக் கொண்டு உங்கள் நிலையை உயர்த்துவர். இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி பிரச்னைகளில் இருந்து உங்களை விடுவிப்பர். உங்கள் செல்வாக்கு உயரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து குடும்பத்திற்குள் குழப்பத்தை உருவாக்கி வந்த சுக்கிரன், மே 31 முதல் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அந்நியரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கையே சூனியம் வைத்ததுபோல் இருந்த நிலை மாறும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் செலவுகள் ஏற்படும். அவர் ஜென்ம ராசியை விட்டு பெயர்ச்சியாகி இருப்பதே மிகப்பெரிய யோகம். இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி, போராட்டம் எல்லாம் இல்லாமல் போகும். குரு பகவான் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் குடும்பம், தொழில், உடல்நிலை அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தனியார் நிறுவனப் பணியாளர்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவார்கள். கலைஞர்களுக்கு ஜூன் 2 முதல் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடை விலகும்.சந்திராஷ்டமம்: மே 26.அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன். 5, 9, 14.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும்.

சித்திரை 3, 4 ம் பாதம்எதையும் தானே உருவாக்கிக்கொள்ளும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். தைரிய, வீரிய காரகன் செவ்வாய் ஜூன் 8 வரை ஜீவன ஸ்தானத்தில் நீச்சமாக சஞ்சரிப்பது உங்களுக்கு யோகமாகும். தொழில், வியாபாரத்தில் அவரால் ஏற்படக்கூடிய பாதிப்பு நீங்கும். வழக்கமான வேலை நடக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது வருமானத்தை அதிகரிப்பார். வரவேண்டிய பணம் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஜூன் 8 முதல் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பிள்ளைகளால் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இளைஞர்களுக்கு காதல் உண்டாகும். அது திருமணம் வரையில் செல்லும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சின்னச் சின்ன நெருக்கடி வரும். மேல் அதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும்.  இக்காலத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். வியாபாரத்தில் தடைகளும் வருமானக் குறைவும் ஏற்படும் ஒரு சிலர் அரசுக்கு அபராதம் கட்டவும் நேரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தவர்களும் ஆரோக்யம் உண்டாகும். சிறு வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: மே 26.அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன் 6, 9.பரிகாரம்: அபிராமியை வழிபட சங்கடம் விலகும்.சுவாதிஉழைப்பாலும் முயற்சியாலும் முன்னேற்றம் காணும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நிதானமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ராகு, பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. குரு பகவானின் பார்வை கிடைப்பதால் எந்த விதமான பாதக பலன்களும் உங்களுக்கு ஏற்படாமல் போகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சொத்து விஷயத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். நினைத்த வேலை நடக்கும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் கனவுகளை நனவாக்குவார். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சகோதரர்கள் ஒத்துழைப்பு  அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்கள் பலம் கூடும். இந்த நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை. அரசாங்க விவகாரத்தில் சில சங்கடம் ஏற்படும். சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவது நல்லது. இல்லையெனில் வீண் சிக்கல்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் ஜூன் 8 முதல் செவ்வாயும் இணைவதால் வருமானம் உயரும். கடன் தொல்லை விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உழைப்பாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு லாபநிலை ஏற்படும்.சந்திராஷ்டமம்: மே 27.அதிர்ஷ்ட நாள்: மே 15, 22, 24, 31. ஜூன் 4, 6, 13.பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட நல்லது நடக்கும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்அறிவாற்றலால் எதையும் சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் மிக யோகமான மாதம். குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் உங்களை விட்டு விலகும். செல்வாக்கு உயரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்குவரும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது வருமானத்தை அதிகரிப்பார். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். புதிய முயற்சிகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மே 16 முதல் ஜூன் 2 வரை புதன் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்து சேரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர். பொருளாதார நிலை உயரும். உறவுகளில் லாபம் கூடும். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி ராகுவிற்கு, குருவின் பார்வை உண்டாவதால் அவர்களால் ஏற்படக்கூடிய நெருக்கடி உங்களை நெருங்காமல் போகும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். உறவினர்கள் உங்களைத் தேடிவந்து உதவி பெற்று செல்வர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள்.சந்திராஷ்டமம் மே 28.அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30. ஜூன் 3, 6, 12.பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மை நடக்கும்.

விசாகம் 4 ம் பாதம்சாணக்கியத்தனமும் சாதுரியமும் கொண்டு செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமான மாதம். ராசியாதிபதி பாக்ய ஸ்தானத்தில் நீச்சம் அடைந்துள்ள நிலையில், நட்சத்திராதிபதி அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் சிக்கல் உண்டாகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். இதுவரை இருந்த நன்மையான நிலையில் மாற்றம் ஏற்படும். ஒவ்வொன்றையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். குரு பகவானின் பார்வையால் ராகு சனியால் ஏற்படும் பாதகமான பலன்கள் உங்களை நெருங்காமல் போகும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவில் ஆதரவு உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வரவு அதிகரிக்கும். செலவு ஏற்பட்டாலும் அது அத்யாவசியமானதாக இருக்கும். ஜீவானாதிபதி சூரியன் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். மாணவர்கள் இக்காலத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். விவசாயிகள் வேளாண்மையில் அக்கறை எடுப்பது நல்லது. உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ஆரோக்யம் மேம்படும். உழைப்பாளர்கள் நிலை உயரும்.சந்திராஷ்டமம்: மே 28.அதிர்ஷ்ட நாள்: மே 18, 21, 27, 30. ஜூன் 3, 9, 12.பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.அனுஷம்எடுத்த வேலையில் உறுதியாக இருந்து அதை முடித்திடும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும் ராகுவும் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்துவர், உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவர் குரு பகவானின் பார்வை நான்காமிடத்தில் பதிவதால் அவை உங்களை நெருங்காமல் போகும். மே 31 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு காதல் உண்டாகும். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை இல்லாமல் போகும். பொன் பொருள் சேரும். நினைத்த வேலைகளை நடத்திக் கொள்ள முடியும். எதிர்பாலினரால் லாபம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை, சங்கடம் முடிவிற்கு வரும். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வேலை நடக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் நிர்வாகத்தை அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் நல்லது. பணி புரியும் இடத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு உயர் கல்வி கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: மே 29.அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.கேட்டைநிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் விருப்பம் நிறைவேறும் மாதம். ஜூன் 2 முதல் புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் நீண்ட நாள் கனவு நனவாகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். மே 31 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முயற்சிக்கேற்ற லாபத்தை தருவார். தொழிலில் கூடுதல் அக்கறை தேவை. புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. வேலைக்காக வெளிநாடு செல்ல முயற்சி மேற்கொண்டவருக்கு அதற்குரிய வாய்ப்பு உருவாகும். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வை உங்களைப் பாதுகாக்கும். 4 ம் இட சனி, ராகுவால் ஏற்படும் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். ஆரோக்யமாக செயல்படுவீர். குடும்பத்தில் சந்தோஷமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வீட்டில் புதிய பொருள் சேரும்.  நேற்றைய கனவு நனவாகும். பிள்ளைகள் எதிர்காலத்தை மனதில் வைத்து சேமிப்பை உருவாக்குவீர். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் நிதானம் காப்பது நல்லது.சந்திராஷ்டமம்: மே 30.அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன் 5, 9, 14.பரிகாரம் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.

மூலம்நீதி, நேர்மை, நியாயம், பாவம், புண்ணியம் என்று வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் மிக, மிக யோகமான மாதம். ஒருவர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு நொடியே போதும்.  நீங்கள்  எதிர்பார்த்தவற்றை அடையும் மாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி இனி இல்லாமல் போகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். குடும்பம், தொழில், உத்யோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். தொண்டர்கள் பலம் கூடும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வசதி வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்களால் அனுகூலம் லாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலையை முடித்து விடக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். மாதத்தின் பிற்பகுதியில் விவசாயிகள் நிலை உயரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைக்குரிய தகவல் வரும். சந்திராஷ்டமம்: மே 30, 31.அதிர்ஷ்ட நாள்: மே 16, 21, 25. ஜூன் 3, 7, 12.பரிகாரம்: மணக்குள விநாயகரை வழிபட முயற்சி வெற்றியாகும்.பூராடம்எத்தனைப் போராட்டம் வந்தாலும் அதற்காக சோர்ந்து போகாமல் வெற்றியை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் ராசியைப் பார்ப்பதால் இதுநாள் வரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். ஏற்பட்ட அவமானம் நீங்கும். நல்ல காலம் வந்தாச்சு என உங்கள் மனம் நினைக்கும். குடும்பத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்குள் புதிய தைரியம் வந்ததுபோல் உங்கள் செயல் இருக்கும். மனபயமும் தயக்கமும் இருந்த இடம் தெரியாமல் போகும். நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் சனியும் போட்டிப்போட்டு உங்களுக்குப் பலன்களை வழங்கிட இருப்பதால் எந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு இக்காலத்தில் உங்களுக்கு லாபம் ஏற்படும். லாப ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை ஏற்படுவதால் பணவரவு அதிகரிக்கும். கடன் தொல்லை முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் செல்வாக்கு உயரும். புதிய பதவி, பொறுப்பு தேடிவரும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிரிகளின் நடவடிக்கைகளாலும், மறைமுகத் தொல்லைகளாலும் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். அரசு வழி முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். திருமண வயதினருக்கு வரன் வரும். இக்காலம் உங்களுக்கு மிக யோகமான காலம்.சந்திராஷ்டமம்: மே 31. ஜூன் 1.அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30. ஜூன் 3, 6, 12.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட மனம் தெளிவடையும்.உத்திராடம் 1 ம் பாதம்முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் பாக்யாதிபதி சூரியன் இதுவரை நீங்கள் அனுபவித்த சங்கடங்களில் இருந்து உங்களை மீட்டெடுப்பார். உங்கள் திறமையை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகளை கிடைக்க வைப்பார். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றியை அளிப்பார். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு, மேல் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து முன்னேற்றம் அடைவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சப்தமாதிபதி புதன் மே 16 முதல் ஜூன் 2 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் நேற்று தள்ளிப் போன முயற்சிகள் இப்போது வெற்றியாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். மூன்றாம் இட சனியும் ராகுவும் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வர். நீங்கள் மேற்கோள்ளும் வேலைகளில் லாபத்தை ஏற்படுத்துவர். இந்த மாதம் உங்களுக்கு மிகப்பெரிய யோகமான மாதமாக இருக்கும். கடந்த கால நெருக்கடி, போராட்டம் எல்லாம் நீங்கி எதிர்காலத்திற்கு தேவையானவற்றை அடையக்கூடிய நிலை இந்த மாதத்தில் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூன் 1.அதிர்ஷ்ட நாள்: மே 19, 21, 28, 30. ஜூன் 3, 10, 12.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்தன் முன்னேற்றத்தில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். இதுவரை எல்லாமே நன்றாக போனது! இனி எப்படி இருக்கும்? என்ற கேள்வி இப்போது உங்கள் மனதில் இருக்கும். கிரகங்கள் ஒரு நேரத்தில் ஒருவருக்கு யோகமான பலன்களையும் அதன் பிறகு அதில் மாற்றங்களையும் வழங்குவர். எதிலும் நிலையானது அல்ல என்பதற்கு கிரகங்களே காரணம். வாழ்க்கையை நாம் உணர்வதற்கு நமக்கேற்படும் பிரச்னைகள் தான் அடிப்படையாக இருக்கிறது. அந்த ரீதியில் இந்த மாதத்தில் சூரியன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம். மனதில் இனம் புரியாத பயம். பிள்ளைகளால் தொல்லை. பூர்வீக சொத்தில் பிரச்னை. உடல் நிலையில் பாதிப்பு. வியாபாரத்தில் நெருக்கடி என்று ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் எளிதாக நடந்து வந்த வேலைகள் கூட இப்போது இழுபறியாகும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். உத்யோகத்திலும் உழைப்பு அதிகரிக்கும். மனதில் நிம்மதி என்பது இல்லாமல் போகும் என்றாலும், மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கை நகரும். செலவிற்கு தேவையான வருவாய் வந்து கொண்டிருக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பாதகமான நேரத்திலும் சாதகமான பலன்களை அடைவதுபோல் நினைத்த வேலை நடக்கும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வாழ்க்கைத் துணையையும் நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது இக்காலத்திற்கு நல்லது. ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் உடல்நிலை இருக்காது என்பதால் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: ஜூன் 1, 2.அதிர்ஷ்ட நாள்: மே 17, 19, 26, 28. ஜூன் 8, 10.பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட நன்மை உண்டாகும்.திருவோணம்நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள்போல் வாழ்க்கைக்குள்ள இரண்டு பக்கங்களையும் அறிந்து முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் போராட்டமான மாதமாகும். ஒவ்வொரு வேலையையும் சிரமப்பட்டு முடிக்க வேண்டியதாக இருக்கும். தேவையற்ற நெருக்கடி, வீண் பிரச்னை, எதிர்பாராத சங்கடம் என உங்களை வாட்டி வதைக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எதிர்ப்புகளை கொண்டு வருவார். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை இருக்கும். ஒருசிலர் தவறான வழியில் சென்று சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டிவரும். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் ஒன்றுவிட்டு ஒன்று என்று ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்ப்பாலினரால் அவமானம் ஏற்படும். ஜூன் 8 முதல் செவ்வாயும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விழிப்புடன் செயல்படுவது அவசியம். உங்கள் வேலை உங்கள் குடும்பம் என்ற எண்ணத்துடன் நாட்களை நகர்த்த வேண்டும். வீண் பிரச்னை எதிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. இக்காலத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வார்த்தைகளாலும் கோபத்தைக் காட்ட வேண்டாம், அது நீடிக்கும்.  உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தனியார் நிறுவன ஊழியர்கள் உடன் பணிபுரிபவர்களையும், நிர்வாகத்தையும் அனுசரித்துச் செல்வது அவசியம். குடும்பத்தினர் ஆலோசனை இக்காலத்தில் உங்களைப் பாதுகாக்கும். புதிய நட்புகளால் வாழ்க்கை திசை மாறும். 6 ம் இட குருவால் மனம் சங்கடப்படும் நிலை உண்டாகும். குருவின் பார்வை ஜீவன, குடும்ப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஜூன் 2 முதல் புதனின் சஞ்சாரம் நன்மைகளை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடி நீங்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு இருக்கும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பதவியை இழக்க வேண்டிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். பொதுவெளியில் அவமானத்தையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: ஜூன் 2, 3.அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29. ஜூன் 8, 11.பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் ஜூன் 8 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். அவர் நீச்சமாக இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் உங்கள் கௌரவம் காக்கப்படும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் ஜூன் 8 முதல் செவ்வாய் இணைவதால் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் விபத்தையும் சந்திக்க நேரும் என்பதால், இக்காலத்தில் அனைத்திலும் நிதானமாக இருப்பது அவசியம். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவார். வார்த்தைகளால் பிரச்னைகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்குவார். பண வரவில் தடைகளை ஏற்படுத்துவார். கிரக சஞ்சாரங்கள் இந்த நேரத்தில் உங்கள் உடல் நிலையை மையப் படுத்துவதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பரம்பரை நோய், தொற்றுநோய் என்று ஒரு சிலருக்கு பாதிப்பினை அதிகரிக்கலாம். ஒருசிலர் அவமானங்களுக்கும் ஆளாக நேரும். எதையும் செய்ய முடியாத அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு எதிராக மாறும். இந்த நேரத்தில் எதிரிகளின் கை ஓங்கும் என்பதால் உத்யோகத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பணியாளர்களும் தாம் உண்டு தம் வேலை உண்டு என கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலர் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்பட வேண்டிய நிலையும் ஏற்படும். ஜூன் 2 முதல் உங்களுக்கு ஓரளவிற்கு பாதுகாப்பு உண்டாகும். வருமானம் வரும். நினைத்தது நடக்கும். பிரச்னை இல்லாத அளவிற்கு வாழ்க்கை இருக்கும். நோய் நொடிகளில் இருந்து விடுதலைக் கிடைக்கும். மருத்துவச் செலவு குறையும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. இருபாலரும் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் என்ன  வந்தாலும் சமாளிக்க முடியும்.சந்திராஷ்டமம்: ஜூன் 4அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.பரிகாரம்: செந்தில் வேலனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

அவிட்டம் 3, 4 ம் பாதம்எதிலும் துணிச்சலுடனும் தைரியமாகவும் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். ஜென்ம ராசிக்குள் ராகு, சனி சஞ்சரித்து மனதில் சலனங்களையும், ஆசைகளையும் உண்டாக்கும் நிலையில், குரு பகவான் 5 ம் இடத்தில் இருந்து ராசியைப் பார்ப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சி ஒவ்வொன்றும் வெற்றியாகும். இதுநாள்வரை ஏதோ ஒரு காரணத்தால் அமைதியாக இருந்து வந்தவர்கள் இனி வேகமாக செயல்படத் தொடங்குவீர். மீண்டும் உங்கள் செல்வாக்கு வெளிப்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனக் குழப்பம் விலகும். 9 ம் இடத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் கோயில் வழிபாடுகளை மேற்கொள்வீர். பெரிய மனிதர்கள் துணை உண்டாகும். 11 ம் இடத்திற்கு குருப்பார்வை உண்டாவதால் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் புதிய உறவு உண்டாகும். இந்த நேரத்தில் ஜூன் 8 வரை நட்சத்திராதிபதி 6 ம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவர் நீச்சம் அடைந்திருப்பதால் அவரால் உண்டாகும் பலன்கள் இக்காலத்தில் கிடைக்காமல் போகும். மே 16 ம் தேதி முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மீண்டும் உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்.சந்திராஷ்டமம்: ஜூன் 4.அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.பரிகாரம்: குருவை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சதயம்முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்கள் ஆசைகளை அதிகரிப்பார். குறுக்கு வழியில் செல்ல வைப்பார். கேது நட்புகளிடையே விரிசலை ஏற்படுத்துவார். கணவன் மனைவி ஒற்றுமையில் இடைவெளியை உண்டாக்குவார். வாழ்க்கைத் துணையின் ஆரோக்யத்தில் பாதிப்பை தோற்றுவிப்பார். இந்த நேரத்தில் ஜூன் 8 முதல் செவ்வாயும் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களின் கவனம் வேண்டும். என்ன வந்தாலும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும் என்ற நிலை உங்களுக்கு இருக்கும். பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் பார்வைகளால் ஜென்ம ராகு, சனியினால் ஏற்படும் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். உங்கள் செல்வாக்கு உயரும். நேற்றைய  எண்ணம் பூர்த்தியாகும். தள்ளிப்போன முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். சொத்து சுகம், வண்டி வாகனம் என்ற கனவு நனவாகும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்கும். மே 16 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். பொன் பொருள் சேரும். அடிப்படை வசதிகள் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிக பணியாளர்கள் சிலருக்கு வேலை நிரந்தரமாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 5.அதிர்ஷ்ட நாள்: மே 17, 22, 26, 31. ஜூன் 4, 8, 13.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடம் விலகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்கால நிலையறிந்து செயல்பட்டு வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடம் இல்லாமல் போகும். குரு பகவானின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் உங்கள் செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். நேற்றைய கனவுகள் நனவாகும். தடைபட்டு வந்த முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். இத்தனை நாளும் அமைதி காத்து வந்த நீங்கள் இனி வேகமாக செயல்படத் தொடங்குவீர். மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வேலை பளு கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை ஏற்படும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதும் புதிய நண்பர்களிடம் கவனமாக இருப்பதும் நல்லது. மே 16 முதல் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய இடம், வீடு வாங்கு முயற்சி வெற்றியாகும். தேவைக்கேற்ற வருமானம் வரும். பொன் பொருள் சேரும். சங்கடம் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 6.அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30. ஜூன் 3, 8, 12.பரிகாரம்: திருவல்லீசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

பூரட்டாதி 4 ம் பாதம்தெளிந்த ஞானத்துடன் மற்றவருக்கு வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். இதுவரை உங்களுக்கு இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். நினைத்த வேலை நடக்கும். குடும்பம், தொழில், உத்யோகத்தில் இருந்த சங்கடம் விலகும். 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றி ஆக்குவார். உங்கள் உழைப்பிற்கேற்ற லாபத்தை வழங்குவார். விரய ஸ்தானத்தில் ராகுவும் சனியும் சஞ்சரித்தாலும் குரு பகவானின் பார்வையால்  சுப விரயங்கள் உண்டாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஜூன் 8 முதல் செவ்வாய் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அனைத்திலும் வெற்றி என்ற நிலை உண்டாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி  இனி இல்லாமல் போகும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். இருந்தாலும், நண்பர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 6.அதிர்ஷ்ட நாள்: மே 21, 30. ஜூன் 3, 12.பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.உத்திரட்டாதிநினைத்ததை உடனே சாதித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். இதுவரை இருந்த நெருக்கடி உங்களை விட்டு விலகும். வாழ்வில் புதிய பாதை தெரியும். உங்களுக்கேற்பட்ட அவமானம், குடும்பத்தில் இருந்த பிரச்னை எல்லாம் இனி இல்லாமல் போகும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்கள் உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செயல்களில் தெளிவை உண்டாக்குவார். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்களை அறிந்து கொண்டு அவர்களை விட்டு விலகுவீர்கள்.  உத்யோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். ஜூன் 8 முதல் செவ்வாயும் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் கூடுதல் பலம் கிடைக்கும். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில் செல்வாக்கு உயரும். ராசிக்குள் சஞ்சரித்து சங்கடங்களை உண்டாக்கி வந்த ராகு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு உண்டானாலும் அவை பயனுள்ளதாக இருக்கும். விரய ஸ்தானத்திற்கு ராசிநாதனின் பார்வை கிடைப்பதால் வீண் செலவு கட்டுப்படும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குதல், பொன் பொருள் சேர்க்கை என்று இருப்பு கரையும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அரசு வழியில் லாபத்தை வழங்குவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடித்துக் கொடுப்பார். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்படுவீர். முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழிலில் லாபம் உண்டாகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 7, 8.அதிர்ஷ்ட நாள்: மே 17, 21, 26, 30. ஜூன் 3, 8, 12.பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்மையை உண்டாக்கும்.ரேவதிசாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் வலிமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திராதிபதி புதன் வீட்டில் ராசியாதிபதி சஞ்சரித்து 8, 10, 12 ம் இடங்களைப் பார்ப்பதால் மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராமல் ஏற்பட்ட பயம் விலகும். கடன் தொல்லை, அவமானம் என்பதெல்லாம் நீங்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செலவு எல்லாம் சுபச் செலவுகளாக மாறும். குடும்பத்தில் சுப செயல் நடக்கும்.  ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். மாதம் முழுவதும் சூரியன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுத்த வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். அரசு வழி வேலைகளில் லாபம் உண்டாகும். ஆறாம் இட கேது உங்கள் திறமையை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உழைப்பாளர்கள் நிலை உயரும். சந்திராஷ்டமம்: ஜூன் 8, 9.அதிர்ஷ்ட நாள்: மே 21, 23, 30. ஜூன் 3, 5, 12.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us